யாழ் மாநகரசபை தொழிலாளி மரணம்!

யாழ்.மாநகரசபை ஊழியர் ஒருவர் வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த அன்ரனிராசு என்பவர் யாழ்ப்பாணம் மாநகரசபையில் சுகாதாரபிரிவில் ஊழியராக உள்ளார் நேற்று காலை(10-03-2018) சின்னக்கடை பகுதியில் துப்பரவு பணியை மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த இளம் குடும்பஸ்தர் 4 பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.