இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை முடங்குமா..? பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ள ரயில் இஞ்சின் சாரதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்..!

இலங்கை புகைரத திணைக்களத்தின் இஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் ஓமந்தைக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள ரயில் மார்க்க வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.