ரணிலுக்கு எதிராக மகிந்த அணியுடன் கைகோர்க்கும் கூட்டமைப்பு உறுப்பினர்?

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினர் ரணிலுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாக கையெழுத்திடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட இணங்கியுள்ளார் என்றும் கூட்டு எதிரணியின் முக்கிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த போதும், கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலை, மற்றும் மோதல்களை தடுக்க தவறியதாகவும், பிரதமர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.