யாழ்.அரியாலையில் போதைப் பொருளுடன் சிக்கிய நபர்

யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு 38 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து சுமார் 3320 மில்லி கிராம் ஹெரோயன் மீட்கப்பட்டுள்ளது.