யாழில் சோகம்; மகனின் தாக்குதலில் பலியான தந்தை

யாழ்.புத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் புத்தூர் – சிறுப்பிட்டி நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.