சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

சாரதி அனுமதி பத்திரத்துக்கான விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துமூல பரீட்சை, எதிர்வரும் மே மாதம் முதல் கணினிமயப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சை செயன்முறை குறித்து போக்குவரத்து திணைக்களத்துக்கு தாம் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்தது மே மாதம் 3ஆம் திகதி கணினிமயப்படுத்தப்பட்ட பரீட்சையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திணைக்கள ஆணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்த அடிப்படையில், கணினிமயப்படுத்தப்பட்ட புதிய வினாக்கள் தாமாகவே இயற்றப்பட்டு, முடிவுகளையும் உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவ அறிக்கைகளையும் புதிய முறையில் வெளியிடுவது குறித்தும் தாம் அவதானம் செலுத்தி வருவதாக போக்குவரத்து திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு