யாழ் மாநகரசபை சுகாதார மேற்பார்வையாளர் பல்கலைகழக மாணவியுடன் பிடிபட்டார்!!

யாழ் மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பல்கலைகழக மாணவி ஒருவருடன் கொண்டுடிருந்த முறை கேடான உறவு அம்பலமாகியுள்ளது.

யாழ் மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பல்கலைகழக மாணவி ஒருவருடன் கொண்டுடிருந்த முறை கேடான உறவு அம்பலமாகியுள்ளது. யாழ் மாநகர சபையில் பணி ஆற்றும் ஐம்பது வயதான சுகாதார பகுதி மேற்பார்வையாளர் ஒருவர், தனது மகள் வயதான பல்கலை கழக மாணவியுடன் நல்லூர் பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அந்தரங்கமாக இருக்கும் போது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டனா்.

இருவரும் மது போதையில் உல்லாசமாக தங்கி இருந்த போது அப்பகுதி பிரதேச இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர் . குறித்த விடுதி பல மாதங்கள் பூட்டப்பட்டு இருந்த நிலையில், சில நாட்களாக அந்த விடுதி இரவில் இயங்குவதாக அப்பகுதியைச் சேர்ந்த பிரதேசவாசிகள் தெரிவித்து அங்கு கலாச்சாரச் சீர்கேடுகள் இடம்பெறுவதை அவதானித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பாக விசனத்திற்கும் உள்ளாகியிருந்த நிலையில் நேற்று 8 .3 .2018 வியாழக்கிழமை கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர் . இது குறித்து மாநகர ஆணையாளரிடம் காணொளி ஆதாரத்துடன் முறையிடவுள்ளதாக கலாச்சாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் . மேலும் குறிப்பிட்ட நபர் திருமணமாகி நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாவார் என்பது குறிப்புடத்தக்கது .