பாடசாலை மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை

கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் தமது வெள்ளிக்கிழமைத் தொழுகையை பாடசாலை மைதானத்தில் முன்னெடுத்தனர்.

கண்டி திகனவில் வன்முறைக் கும்பல்களால் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு தொழுகையில் ஈடுபடுவதற்கான வசதிகள் இல்லை.

இந்த நிலையில் முஸ்லிம்கள் தமது வெள்ளிக்கிழமை தொழுகையை திகன பாடசாலை மைதானத்தில் இன்று நண்பகல் முன்னெடுத்தனர். அதனால் பாடசாலை மைதானத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.