யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை மீது ஆவா குழுவினர் தாக்குதல் (படங்கள்)

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாக்குதல் தாரிகளில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. ஆவா குழுவினைச் சேர்ந்த 12 பேர் 10 மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 
இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்;றுக்கொண்டிருந்த போது, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவர் தப்பிக்க முற்பட்ட போது, அவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.