கல்முனையில் விநாயகர் ஆலயத்திற்கு விசமிகளால் தீ வைப்பு!

கல்முனை மாநகரில் அமைந்துள்ள தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி தோரணத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ள நிலையில் நடந்து முடிந்த வருடாந்த ஆலய உற்சவத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தோரணம் ஒன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் உடனே அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை செய்துள்ளனர்.