யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ் வழக்கு பொதுச் சட்டமான தண்டனைச் சட்டக் கோவையின் 120ம் பிரிவின் கீழ் இனங்களிக்கிடையில் முறுகலை ஏற்படுத்தவதை ஆதாரமாக கொண்டு தாக்கல் செய்யப்படுமாக இருந்தால் சந்தேக நபரிற்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதமன்றத்திற்கு உண்டு, ஆனால் பொலிஸ் பேச்சாளருடைய கருத்தின் படி பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுமாக இருந்தால் நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லை, சட்டமா அதிபர் பினை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் நீதி மன்றம் பிணை வழங்க முடியும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் விசாரணை செய்வதாக இருந்தால் மூன்று நாட்களிற்கு (72 மணித்தியாலம்) பொலிஸ் தடுப்பில் வைத்த விசாரணை செய்ய முடியும், 72 மணித்தியாலத்திற்கு மேலதிகமாக விசாரணை செய்யப்பட வேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று விசாரணையை தொடர முடியும்.
ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு யாழ் மேயர் கைது செய்யப்பட்டு 24மணித்தியாலங்களுக்குள் ஆஜர்ப்படுத்த படுவதனால் அது பெரும்பாலும் பொதுச் சட்டமான தண்டனைச் சட்டக்கோவை 120 பிரின் கீழ் அஜர் படுத்தப்படலாம் அவ்வாறு ஆஜர்படுத்தப்படுமாக இருந்தால் நீதிமன்றம் தனக்குரிய தத்துனிவு அதிகாரத்தின் மூலம் பிணை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தண்டனைச் சட்டக்கோவை 120 பிரின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானமை குறிப்பிடத் தக்கது.