அஜித்தை வீடியோ எடுத்த பெண் போனில் கதறல்! ஷாலினி கொடுத்த அதிர்ச்சி பதில்

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததற்க்காக பர்ஜானா என்ற பெண்ணை பணி நீக்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்கொலைக்கு முயன்றும் காவல்நிலையத்தை தொடர்புகொண்டும், செய்தியாளர்களிடம் உரையாடினார்.

இந்நிலையில், இதுகுறித்து அஜித் மனைவி ஷாலினியுடன் உதவிக்கேட்டு போனில் பேசியுள்ளார். அப்போது, பேசிய ஷாலினி, அஜித்தை வீடியோ எடுத்ததற்காக உங்களை பணி நீக்கம் செய்யவில்லை என்றும், கொரோனா ஆட்குறைப்பால் நிறைய ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோது உங்களையும் நீக்கிவிட்டதாகவே மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இவரை போல நிறைய ஊழியர்கள் உதவி கேட்டு வருவதாகவும், Foundation மூலமாகவே உதவிகள் செய்து வருவதால் ஏற்கனவே நிறைய பேர் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடியோவுக்காக இளம்பெண் வேலை இழந்து கஷ்டப்படுவதை, கண்ட நெட்டிசன்கள் ஆறுதலாக அவருக்கு உதவ அஜித் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.