மதுப்பிரியர்களுக்கு கவலை தரும் தகவல்

மதுபானசாலைகள், மது அருந்தும் இடங்கள் மற்றும் மது அருந்தும் அனுமதியுடனான உணவகங்களை நடத்திச் செல்வதற்கான சுகாதார வழிகாட்டியொன்றை மதுவரித் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி,

மதுபான விற்பனை நிலையங்களை உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க முடியும்.

வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் கள்ளு அருந்தும் இடங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு நட்சத்திர ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளுக்காக இரவு 10 மணி வரை மாத்திரம் திறக்க அனுமதி.

ஹோட்டல் மதுபான நிலையங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

திரையரங்கு மதுபானசாலை மறுஅறிவித்தல் வரை பூட்டு. உணவகங்களுக்கான மதுபான நிலையம் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

வாடிவீடு மதுபானசாலை இரவு 10 மணி வரை திறக்க அனுமதி.

களியாட்ட விடுதிகளுக்கான மதுபான நிலையம் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

22A அனுமதிப் பத்திரம் உள்ள இடங்கள் உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க அனுமதி.

22B அனுமதிப் பத்திரம் உள்ள இடங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு.