கொரோனா தொற்றுக்குள்ளனவர் வீட்டில் தங்கியிருந்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை!

களுத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தங்கியிருந்த வீட்டின் 16 வயது பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று காலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச் செய்தியில் தெரிவிக்கையில்,

குறித்த பெண், தனிமைப்படுத்தப்பட்ட களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிலுள்ள நாகொட தெற்கு கிராமசேவகர் பிரிவின் விஜித மாவத்தைப் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பொலிஸாரின் உதவியுடன் அனுமதிக்கப்பட்டார்.

அம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் பாதிப்புற்ற பெண் முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபரை கடந்த 4 நாட்களாக வீட்டிலேயே தங்க வைத்திருந்ததாக பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச்சுகாதார மருத்துவ பரிசோதகர் தெரிவித்துள்ளார்.