முள்ளியவளையில் முகக்கவசம் அணியாத சமூர்த்தி உத்தியோகத்தர் இருவர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள முள்ளியவளை,தண்ணீரூற்று,நீராவிப்பிட்டிப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவ 9பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் நாடாளவியரீதியில் நடைபெற்று வருகின்றது.

இன்னிலையில் முள்ளியவளை பொலீசாரும்,பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் போது இரு சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்கள் இவர்களை பிடித்த பொது சுகாதார பரிசோதகர்கள் பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இவர்கள் மீது வழக்குபதிவுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த 9 பேரின் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டநீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முள்ளியளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் கூடும் பொது இடங்களில் சுகாதார நடைமுறை கண்காணிப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.