திருமண நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த சில நாட்களில் வீட்டில் மயங்கிய புதுப்பெண்! குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியின் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கார்த்திகா (29).

இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ம் திகதி பன்னீர்செல்வம் திடீரென உயிரிழந்தார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தனது தந்தை இறந்ததால் கார்த்திகா மனமுடைந்து இருந்தார். இதனால் அவர் கழிப்பறைக்கு பயன்படுத்தும் திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் மயங்கி விழுந்த அவரை கண்ட குடும்பத்தார் பதறி போனார்கள். பின்னர் கார்த்திகா திராவகத்தை குடித்தார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.