பிக்பாஸ் 5வது சீசனுக்கு போடப்பட்டு வந்த செட்… எதிர்பாராத சோகத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பயங்கர பிரபலமாகியுள்ளது.

வெளிநாட்டில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபல இந்நிகழ்ச்சியினை இந்தியாவிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழில் நான்கு சீசனைக் கடந்த இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐந்தாவது சீசனுக்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் ஃபிலிம் சிட்டி ஒன்றில் நடைபெற்று வந்தது.

செட் அமைக்கும் பணிகள் முடிந்ததும் நிகழ்ச்சி ஆரம்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.