நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பிரதம குரு மரணம்

நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் உயிரிழந்துள்ளார்.

வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் ஈழத்து சைவ உலகின் பெரும் சொத்து, சர்வதேச இந்துமத குருபீடத்தின் தலைமகன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.