200 கடல்வாழ் உயிரினங்களை கொன்றது X-Press Pearl கப்பல்!

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக தற்போது கடல் மாசு அதிகரித்து கொண்டேசெல்கின்றதுடன் கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழக்கின்றன .

அந்த வகையில் கப்பல் தீ விபத்து காரணமாக 176 கடலாமைகள், 4 சுறாக்கள் மற்றும் 20 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது. இதன்போது பிரசன்னமாகிய குற்றப் புலனாய்வுப்பிரிவின் சார்பான பிரதி சொலிசிடர் ஜெனரல் மாதவ தென்னகோன், இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும் இந்தத் தீவிபத்தைத் தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி நாடளாவிய ரீதியில் சுமார் விசாரணைகள் நீதிமன்றங்களில் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.