27 ஆயிரம் பெண்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இணையத்தளங்கள் மூலம் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வதற்கு சுமார் 27000 பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் பலரும் விபசார தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சிலர் தனியார் துறை மற்றும் அரச துறைகளில் தொழில் புரிந்து ஓய்வு நேரங்களில் விபசார தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களில் பலரும் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குறைந்த வயது யுவதிகள் தொடக்கம் 40, 45 வயதுக்கு இடைப்பட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.