பிக்பாஸிலிருந்து திடீரென வெளியேறிய நமீதா மருத்துவமனையில் அனுமதி? வெளியான தகவல்

பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறிய திருநங்கை நமீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3ம் திகதி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்களில் திருநங்கை நமீதாவும் ஒருவர். இவர் நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார்.

இந்த சீசன் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திருநங்கையை களமிறக்கினர். அதே போன்று கதை சொல்ல போறன் என்ற டாஸ்கில் நமீதா தான் வாழ்வில் பட்ட கஷ்டங்களை அவதானித்த ஒட்டுமொத்த பார்வையாளர் மனதில் இடம்பிடித்தார்.

நேற்றைய தினத்தில் இவர் வெளியேறிவிட்டதாக தகவல் வைரலாகிய நிலையில் பிரபல ரிவி இதனை உறுதி செய்யும் விதத்தில், நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே “பிக்பாஸ் உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டை வெளியேறியுள்ளார்” என்று கூறினார்.

இதன் பின்பு உள்ளே எண்ட்ரியான கமலும், பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள், ரசிகர்கள், நான் என அனைவரும் நமீதாவிடம் இதயத்தினை பரிகொடுத்துவிட்டோம். தொடர் இடர் வந்தாலும் வெற்றிகளை தேடி பெற்ற நமீதா இதுபோலவே செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறிவிட்டு நிகழ்ச்சியினை ஆரம்பித்தார்.

நமீதாவிற்கு நெருக்கமான சில நண்பர்கள், உடல்நலனில் ஏற்பட்ட திடீர் பிரச்சினை காரணமாகவே நமீதா வெளியேறியுள்ளதாகவும், அருகிலிருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்றும், நமீதாவை குறித்த சேனல் வெளியேற்றவில்லை… அவர் தனது விருப்பத்தின் பெயரிலேயே வெளியேறியதாகவும் கூறியுள்ளனர்.

மக்களின் இதயங்களை வென்ற நமீதா வெளியேறியதற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கின்றதா? என்பதை போக போகவே மக்களுக்கு தெரியவரும்.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் நமீதாவிற்கு குடும்பத்தினரும், சில திருநங்கை நண்பர்களும் சேர்ந்து கேக் வெட்டி வழியனுப்பி வைத்த காட்சியினை இரு தினங்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.