யாழ். இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வாடகை வீட்டில் நேற்று பிற்பகல் தகராறு செய்துள்ளனர்.
நேற்று மதியம் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்திற்கு காதல் விவகாரமே காரணம் என கூறப்படுவதுடன்,
காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.