பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உ யிர் பறி போனது : தாய்க்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

படல்கம – ஆதிமுல்ல பகுதியில் அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சட ல ம் மீட் கப் பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாயை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.

இதன்படி, சிறுவனின் தாயை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

படல்கமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் அறையொன்றில் 10 வயது சிறுவன் சட ல மாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அப்பகுதி முழுவதும் துர்நா ற்றம் வீசியமை தொடர்பில் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைப் பாட்டையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்ட போதே சிறுவனின் சட லம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 7ஆம் திகதி குறித்த சிறுவனின் தொண்டையில் சளி சிக் கியதால் சு கயீன முற்றுள்ளதாகவும், நோய் குணமடைவதற்காக பெற்றோர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மத வழிபாடுகளின் போதே சிறுவன் உயிரிழ ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனின் உயிரை மீட்க வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.