யாழில் மாணவன் அஜய் பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் – மீசாலை பகுதயில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

குறித்த மாணவனுக்கு டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

மாணவன் கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில் பரீட்சை முடிவுக்காக காத்திருந்த மிகச் சிறந்த புள்ளிகளை பாடசாலை மட்டத்தில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக திறமை வாய்ந்த மாணவன் என பாடசாலையில் தெரிவித்துள்ளனர்.

மாணவன் தொடர்பில் ஒருவர் தனது முகநுால் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பலராலும் முதல் நிலை பெறுபேற்றை பெற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையை வென்ற திறிமையான மாணவனின் உயிரை டெங்கு நோய் பறித்துள்ளதுள்ளமை மிகுந்த வேதனை எனக் குறிப்பிட்டுள்ளார்.