கோட்டாபயவின் மாளிகைக்குள் சிக்கிய சதி நடவடிக்கையின் ஆதாரம்

கொழும்பில் பாரியளவில் மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தை மூடிமறைக்க அரசாங்கம் சதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இணைய சேவைகளை முடக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேரலையாக செய்திகளை வெளியிட முடியாத வகையில் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.