யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் ஊழியர்!

யாழில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அரசாங்க ஊழியரான பெண் ஒருவரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளராக பணியாற்றிவந்த கலைமதி சொல்லத்துரை (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும் இவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்தவர் ஆவார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பட்டா வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார்.

இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் பட்டா சராதியை கைது செய்துள்ளனர்.