முகத்தில் மிகப்பெரிய ஆப்ரேஷன்! நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட முதல் பதிவு

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நடிகர் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் தகவல் வெளியானது.

பின்பு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய் ஆண்டனிக்கு, தாடை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால், பெரிய அறுவை சிகிச்சை தற்போது முடிந்துள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகி வருகின்றது.

விஜய் சேதுபதியின் டுவிட்டர் பதிவு
“மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன்.

விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.