கணவனை விட்டு காதலனுடன் செல்லமுயன்ற மகள்; கூறுபோட்ட தந்தை!

இந்தியாவில் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் செல்ல முயன்ற மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய சாருஜா என்னும் பெண் அப்பகுதி இளைஞரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில் காதலுக்குச் சாருஜாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அத்துடன் அவசர அவசரமாக அயல் ஊரில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துவைத்து மாப்பிள்ளை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் வீட்டுக்கு செல்ல மறுப்பு

கணவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சந்தோஷமாக வாழ்ந்த குறித்த யுவதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெற்றோரைப் பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார்.

இதன்போது தனது பழைய காதலனைச் சந்தித்தார் பின்ன இருவரும் சுற்றித் திரிந்த நிலையில் கணவர் வீட்டுக்கு வருமாறு வந்து அழைத்தபோது அங்குச் செல்ல மறுத்த சாருஜா தனது பெற்றோரிடம் கணவன் வேண்டாம் காதலனுடன் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை நேற்று முன்தினம் சாருஜாவின் தலையினை கத்தியால் துண்டித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.