யாழ். சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, டச்சு வீதி கண்டுவில் எனும் இடத்தில குளத்தின் அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.00 மணியளவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் சாவகச்சேரி, தபால்கந்தோர் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கு.மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.