யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற சோபகிருது வருஷப்பிறப்பு!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 2023 சோபகிருது வருஷப்பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக இன்று காலை இடம்பெற்றது.

புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர். நாடாளாவிய ரீதில் இன்று தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக வாழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கட்டும்

கொரோனா தொற்று அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பன மக்களை வாட்டி எடுத்ததன் காரணமாக புத்தாண்டு விழாக்களை மக்கள் சிறப்பாக கொண்டாடவில்லை.

இந்நிலையில் பிறந்துள்ள சோபகிருது சித்திரைப் புத்தாண்டானது உலக வாழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் சந்தோசத்தையும் கொடுக்கவேண்டுமென இறைவனை பிராத்திப்போம்.