யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்: ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்த இளைஞர்

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று( 17) காலை இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரத தண்டவாளத்தினுள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.