ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயம் அடைந்த பருத்தித்துறை ஹட்லிக்கல்லூரி முன்னாள் மாணவன் இன்று உயிரிழந்துள்ளர்.

வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.