கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (09) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
புளியம்பக்கடை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இளைஞனின் சடலம்
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி- பரந்தன் முல்லைதீவு ஏ 35 வீதியில் புளியம் பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.