கிணற்றில் விழுந்து உயிரிழந்த இளம் குடும்பப்பெண் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவமானது நேற்று முன்தினம் (10) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு குறித்த பெண் நித்திரைக்கு சென்ற நிலையில் அடுத்தநாள் காலையில் குடும்பதினர் தேடியபோது பின்னர் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.