இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட மாணவன்; வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரபல மொடல் அழகிகளின் பெயரில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை போலியாக உருவாக்கி அழகான இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட பாடசாலை மாணவர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 19 வயதுடைய உயர்தரப் பாடசாலை மாணவர் ஆவார்.

இந்நிலையில் சந்தேகநபர் பயன்படுத்திய கணனியில் வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தின் ஊடாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அழகான இளம் பெண்களின் சுமார் 15 நிர்வாண புகைப்படங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அழகான யுவதிகளுக்கு குறிவைக்கும் இளைஞன்
பிரபல நிறுவனங்களில் மொடலிங் துறையில் பணியாற்ற விரும்பும் அழகான யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று தெரிவித்து மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரபல மொடல் அழகிகளின் பெயர்களை கூறி போலியான வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கியுள்ளார்.

ஆர்வத்தை வெளிப்படுத்தும் , அந்த இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை அவர்கள் மூலமாக பெறுவார். சந்தேக நபர் ஒவ்வொரு யுவதியுடனும் குறுஞ்செய்தி மூலம் தொடர்பில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.