பெண்கள், யுவதிகளுக்கு எச்சரிக்கை – பேருந்துகளில் நடக்கும் மோசமான செயல்; பெண்களே அவதானம்!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் யுவதிகள், பெண்களுக்கு பல்வேறு துஸ்பிரயோகம் இடம்பெறுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

பேருந்துகளில் பயணிக்கும் போது சில இளைஞர்கள், முதியவர்கள் என அங்க சேட்டையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்துகளில் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இடம்பெறுவதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தென்னிலங்கையில் பயணித்த பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர், யுவதியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைத்தளத்தில் குறித்த காணொளியை பதிவிட்டு பெண்களை எச்சரிக்கை செய்துள்ளார்.