கொழும்பு – அவிசாவளை வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து ஹங்வெல்ல – அம்புல்கம பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறியும், அக்கரப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.