Onmax DTயில் பணம் வைப்பிட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்

பிரமிட் போன்ற முதலீடுகளில் வைப்பிட்டவர்கள் கடன் மறுசீரமைப்பின் கீழ் பணத்தை இழக்க நேரிடும் என இலங்கை பிரமிட் எதிர்ப்புப் படையின் அழைப்பாளர் தரிந்து ரத்நாயக்க கூறுகிறார்.

பிரமிட் வடிவில் மத்திய வங்கி 3000 கோடி ரூபாய் பெறுமதியான கணக்கினை தடுத்து வைத்துள்ளது.

நேற்று (28.06.2023) பிற்பகல் இலங்கை பிரமிட் எதிர்ப்புப் படை கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வந்து அங்கிருந்து வெளியேறிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தரிந்து ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,

பிரமிட் கணக்குகள்
பிரமிட் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் விசாரிப்பதற்கு மத்திய வங்கி சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும், ஜனாதிபதி செயலகத்திற்கு வந்த போது இது தொடர்பில் கடிதம் மூலம் எழுத்துப்பூர்வமாக.தெரியப்படுத்துமாறு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த விடயத்தை எழுத்து மூலம் ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய வங்கியில் தடுத்து வைத்துள்ள பணத்தில், இதுவரை பெரும்பாலானோர் ஏமாற்றப்பட்டு முதலீடு செய்யப்பட்ட Onmax DT பிரமிட் திட்டத்தின் பணம் உள்ளதாக தரிந்து மேலும் தெரிவித்துள்ளார்.