இறுதி செய்யப்படவுள்ள சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள்

ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மதுபான விலைப் பட்டியலை அந்தந்த நிறுவனங்கள் திங்கட்கிழமை (03) இறுதி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த விலை உயர்வுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட விலை
நான்கு வகைகளின் கீழ் சிகரெட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன்மூலம் சிகரெட்டின் விலை 5, 15, 20 மற்றும் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து வகையான மதுபான போத்தல்களும் 300 ரூபாயாலும் பியரின் விலை 50 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.