இளைய சகோதரனால் மூத்த சகோதரனுக்கு நேர்ந்த சோகம்

பொலன்னறுவையில் நபரொருவரை அவரது இளைய சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து நேற்று இரவே இக் கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 25 வயதுடைய நபர் என தெரிய வந்துள்ளது.

இருவருக்கும் இடையே இடம் பெற்ற வாக்குவாதத்தை அடுத்து இளைய சகோதரன் தனது மூத்த சகோதரனை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சகோதரன்
படுகாயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் இளைய சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.