வெளிநாட்டு பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த யானை

சித்துல்பவ்வ ரஜமஹா விகாரைக்கு சென்ற 24 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று பிற்பகல், விகாரையின் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள சங்குவாசலுக்கு முன்பாக படம் எடுக்கச் சென்ற போது கொந்தா எனப்படும் காட்டு யானை தாக்கியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தின் போது யுவதியுடன் மேலும் சில வெளிநாட்டவர்களும் இருந்ததாக தெரியவந்துள்ளது.

காட்டு யானையின் தாக்குதல்

பின்னர், அருகில் இருந்தவர்கள் யானையை விரட்டியதையடுத்து, யுவதி அம்புலன்ஸ் மூலம் தெம்பரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.