பிரிந்து வாழ்ந்த பெற்றோர்; யாழில் பட்டதாரி மாணவியின் விபரீத முடிவால் பெரும் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அணமையில் பட்டம்பெற்ற் இளம் பட்டதாரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் 27 வயதான சற்குணரத்தினம் கௌசி எனும் யுவதியே, பெற்றோரின் குடும்ப தகராறு காரணமாக விபரீத முடிவால் வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிரிந்து வாழ்ந்த பெற்றோர்
நேற்றிரவு (28) குறித்த யுவதி துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். அதேவேளை உயிரிழந்த யுவதி சப்ரகமுவ பல்கலையில் கல்வி பயின்று அண்மையிலேயே பட்டதாரியாக பட்டம் பெற்றவர் என கூறப்படுகின்றது.

யுவதியின் பெற்றோர் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மகளின் பட்டமளிப்பு விழாவில் இருவரும் கலந்துகொண்டதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் நன்றாக கல்வி கற்று பட்டதாரியாகி நல்லதொரு நிலைக்கு வந்த மாணவி , வாழவேண்டிய வயதில் பெற்றோர் பிரச்சனையால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.