தாயின் கண்முன்னே பெண்ணை துகிலுரித்த இளைஞர்; நெட்டிசன்கள் ஆத்திரம்!

இந்தியாவில் தாயின் கண் முன்னரே இன்னொரு பெண்ணை சாலையில் வைத்து இளைஞர் ஒருவர் நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த ஞாயிறு அன்று, பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்தார்.

சம்பவத்தை கண்டுகொள்ளாத தாயாரால் ஆத்திரம்
இரவு 8 மணி அளவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய தாயாருடன் வந்து கொண்டிருந்த நிலையில் , துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார்.

பின்னர் பலவந்தமாக அவரது ஆடைகளை இழுத்து நிர்வாணப்படுத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த பெண் ஒருவர் இந்த மோசமான செயலை தடுத்து நிறுத்தி, ஆடை களையப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயன்றார்.

இதன்பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இளைஞருக்கு அடி கொடுத்த பெண்ணை காப்பாற்றினர். தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்தனர்.

இதற்கிடையே மகன் குற்றம் செய்தபோது அவரை தடுக்க அவரது தாயார் முன்வரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மணிப்பூரில் 2 மாதங்களுக்கு முன்பு என்ன நடந்ததோ அதுதான் ஐதராபாத்தில் இன்று நடந்துள்ளது என்று வேதனை தெரிவித்தார்.