சிகிரியாவை பார்வையிட வந்த வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டணத்தால் ஏமாற்றம்

சிகிரியாவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் கட்டணம் அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு பார்வையிட வரும் வெளிநாட்டு பயணி ஒருவர் கிட்டத்தட்ட 10000 ரூபாய் பயணச்சீட்டு பெற வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிக கட்டண அறவீடு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 9810 ரூபாவும், உள்நாட்டு சுற்றுலாப்பயணிக்கு 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளிடம் இவ்வளவு அதிக தொகையை வசூலிக்க கூடாது என சமூக வலைதளங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.