இனங்காணப்படாத நோய் காரணமாக மேலும் 3 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

இனங்காணப்படாத நோய் காரணமாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைதிகள் இன்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இனங்காணப்படாத நோய் காரணமாக நேற்றைய தினம் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.