இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நேற்று (31-08-2023) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 359 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரித்து. 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.