இலங்கையில் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணங்களை இணையவழியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையவழியில் பணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பல அரச நிறுவனங்களை மையப்படுத்தி இதற்கான முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.