செப்டம்பர் 23 முதல் பண மழையால் நனைய போகும் 3 ராசிக்காரர்கள்

நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 2 1/2 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். செவ்வாய் ராசியை மாற்றுவதைத் தவிர நட்சத்திரங்களையும் மாற்றுவார்.

அந்த வகையில் செவ்வாய் வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்கு செல்கிறார். செவ்வாய் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் நல்ல பண பலன்களைப் பெறுவதோடு இந்த ராசிக்காரர்களின் விருப்பங்களும் நிறைவேறப் போகிறது.

இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் பண பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 23 முதல் சிறப்பாக இருக்கப் போகிறது.

முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறப் போகிறது. எதிர்பாராத பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.

புதிய வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களை வழங்கும்.

சிலர் பரம்பரை சொத்துக்களால் நல்ல பண ஆதாயத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம்.

சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை சிறப்பாக முடியும்.

இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.