கூந்தல் உதிர்வுக்கு முடிவு கட்டணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

பொதுவாகவே பெண்கள் தங்களின் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர் .

ஆனால் தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயணம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிலக்கும் பிரச்சினைகள் அதிகமாகிவிட்டது.

கற்றாழை ஜெல்லை…
கற்றாழை ஜெல்லில் வைட்டமின்களும் அமினோ அமிலங்களும் அதிகளவில் நிறைந்துள்ளது.

இதனால் இது கூந்தல் உதிர்வை தடுப்பதுடன் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.

வீட்டில் கற்றாழை செடி இருந்தால் அதிலிருக்கும் கற்றாழையையும் அதன் சாற்றினையும் எடுத்துக்கொள்ளலாம்.

அப்படி இல்லையென்றால் கடையில் இருந்து சுத்தமான கற்றாழை ஜெல்லை வாங்கிப்பயன்படுத்தலாம்.

அவ்வப்போது வீட்டில் இயற்கையான முறையில் கிடைக்கும் கற்றாழை சிறந்த பயனை கொடுக்கும்.

கற்றாலை ஜெல்லை ஈரமான கூந்தலில் தான் தடவ வேண்டும். உங்கள் விரல்கள் அல்லது ஏதேனும் பிரஷ்ஷினை வைத்து நேரடியாக கற்றாழை சாற்றினை உங்கள் உச்சந்தலையில் தடவலாம். முடியின் வேரில் இருந்து ஆரம்பித்து, முடி நுனி வரை இந்த கற்றாழை சாற்றினை தடவவும்.

கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் போது அதில் உள்ள மஞ்சள் நிறமாக மாறியிருக்கும் பகுதியை தவறியும் பாவிக்க கூடாது.

முடி அதிகளவில் உதிர்ந்து காணப்படும் பகுதியில் கற்றாழையின் ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால், கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நொதிகளானது பாதிப்படைந்த கூந்தலை புதுப்பித்து, முடியின் வளர்ச்சியை அவ்விடத்தில் தூண்டும். எனவே முடி அதிகம் உதிரும் போது, கற்றாழையின் ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்வது, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

கற்றாழை ஜெல்லை ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனர் என்று சொல்லலாம். ஏனெனில் இதனை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், அவை கூந்தலை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ளும்.

அதற்கு கற்றாழை ஜெல்லில் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, கூந்தலில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் வறண்ட கூந்தலுக்கு எளிதில் முடிவுக்கட்டிவிடலாம்.

கற்றாழை ஜெல்லை அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயுடன் கலந்தும் பயன்படுத்தவாம். இவ்வாறு தினசரி பயன்படுத்திவர கூந்தல் உதிர்வு வறண்ட கூந்தல் வலுவிலந்த கூந்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும்.

கற்றாழையில் உள்ள நொதிகளானது பொடுகுத் தொல்லைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

அதற்கு கற்றாழை ஜெல்லில், சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு கொண்டு கழுவினால் பொடுகு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.