யாருக்கும் பிடிக்காத 5 ராசிக்காரர்கள்: யார் யார்னு தெரியுமா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் நடை உடை பாவனை மற்றும் பழக்கவழக்கஙகள் என அனைத்தும் வேறுபடுகின்றது.

ஒருவர் மற்றவரை ஈர்க்க வேண்டும் என்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பும் சில குணாதிசயங்களை கொண்டிருப்பது அவசியமாகின்றது.

12 ராசிகளுள் குறிப்பிட்ட 5 ராசிகளை மட்டும் மற்றவர்கள் விரும்புவதில்லை அந்த ராசிக்காரர்களின் குணாதிசயங்கள், அப்படி பிடிக்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட சில தனித்ததுவமான காரணங்கள் இருக்கின்றது. யார் யார் அந்த ராசிக்காரர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

1.மேஷம்

12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிகாரர்கள் அவைவருக்கும் பிடிக்காத ராசிகளின் பட்டியலிலும் முதலில் தான் இருக்கின்றனர். இவர்களிடம், பிறருடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணமும், என்ன செய்தாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பது போன்ற எண்ணங்களும் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.

இத்தகைய வலிமையான குணமும் கடுமையான போக்கையும் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இந்த ராசியை சேர்ந்த பலர், பெரும்பாலும் தலைமை பதவியை வகிப்பார்கள்.

இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலான நேரங்களில் தனது உணர்ச்சிகள் மட்டும் முக்கியம் என நினைத்து பிறரை பற்றி கவலைப்பட மாட்டார்கள் இதனால், பலர் இவர்களால் கவலையடைய நேரிடும்.

இவர்கள் இந்த குணத்தை சற்று மாற்றிக்கொள்ள முயற்சித்தால் பலருக்கும் பிடித்தவர்களாக மாறலாம்.

2.விருச்சிகம்

விருச்சிக ராசியை சேர்ந்தவர்களை அனேகமானோர் பிழையாக புரிந்துக்கொள்ளும் நிலை ஏற்படும்.

இவர்கள், தங்களது உணர்வுகள் மற்றும் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை எப்போதும் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வர்.

இதனால், பல சமயங்களில் இவர்களுடன் இருப்பவர்களாலேயே இவர்களை புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இவர்கள் அனைவரிடமும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள் மற்றவர்கள் கூறும் ரகசியங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவர்களாக இருப்பார்கள்.

விருச்சிக ராசிக்காரர்களை நன்கு அறிந்தவர்களால் மாத்திரமே இவர்களை புரிந்துக்கொள்ள முடியும்.

3.மகரம்

மகர ராசியை சேர்ந்தவர்கள், அவர்களின் லட்சியத்திலேயே எப்போதும் கண்ணாக இருப்பார்கள்

சிலர் இந்த குணாதிசயத்தை சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வார்கள். அதனால் பலரின் வெறுப்புக்கும் ஆளாவார்கள்.

மகர ராசிக்காரர்களுக்கு மாறாத உறுதியும், பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் முன்னிலையில் இருக்கும்.

4.கும்பம்

கும்ப ராசியை சேர்ந்தவர்கள், புத்திசாலித்தனமாகவும் எதையும் மாற்றி யோசிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

சிலர் இதனாலேயே கூட்டத்தில் இருந்து பிரித்து பார்க்கப்படுகின்றார்கள், ஒரு சிலர் இவர்கள் யோசிக்கும் விதங்களை விசித்திரமானது என நினைக்கின்றார்கள்.

இதுவே இவர்கள் தனித்து விடப்படுவதற்கும் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதற்கும் காரணமாக இருக்கின்றது.

5.தனுசு

எப்போதும் சாகசத்தையும் சுதந்திரத்தையும் விரும்புபவர்கள், தனுசு ராசியை சேர்ந்தவர்கள். இவர்களின் இந்த குணாதிசயமே சமயங்களில் இவர்களை பிடிக்காமல் செய்து விடுகிறது. தனித்துவமாக செயல்பட விரும்பும் இவர்கள், எந்த உறவிற்குள்ளும் செல்ல பயப்படுவர்.

இதனால், பல நல்ல உறவுகளும் இவர்களின் கையில் கிடைக்காமல் போய்விடும். இவர்களின் நேர்மை தன்மையை அனேகமானோர் சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வதுண்டு. இதனாலேயே பலருக்கும் இவர்களை பிடிப்பதில்லை.